ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ரு )
Othimalai Devine Secrets and its Devine Journey (5)
சிவ சிவ
அன்று சீர்காழி பிள்ளையார், மயிலையில் இறந்துபோன பெண்ணின் எலும்புத்துகலை (அஸ்தியை) கபாலீச்சுரன் சந்நிதியில் வைத்து கயிலை நாதனை இறைஞ்சி பூம்பாவை என்ற பெண்ணை உயிருடன் மீட்டு கொடுத்தார் என்பது வரலாறு.
இப்போது சிரவண புறீச்சுரராக குழந்தையை கொடுத்த நிகழ்வுக்கு வருவோம் - அன்று அவிநாசியில் ஆற்றில் விளையாடிய குழந்தையை முதலை கொண்டு சென்றது. மூன்று ஆண்டுகள் கழித்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசியப்பரை உரிமையுடன் "முதலை வாய் குழந்தையை மீட்டுத்தர பணி " என்றதும் அய்யன் அருளால் அப்பாலகன் உயிருடன் மீண்டுவந்தான் இதுவும் இத்தள அருள் வரலாறாகும்.
இப்பொழுது சரவணப்பட்டி ஈசனாக இராமசாமியின் மகனை காலனிடமிருந்து மீட்டுகொடுத்த சம்பவம்.
இதை நாம் ஏன் பேசுகிறோம் என்றால் அந்த இறைவன் இன்றளவிலும் அன்பர்களுக்கு அருள்கின்றானா என்ற ஐயம் எழாவண்ணம் இருபதற்குதான். நம்முடன் இறைவன் இருக்கிறான் என்பதை முழுமையாக நம் அனைவருள்ளும் உறைகிறான் என்பதை உணர்தல் வேண்டும் அல்லவா !. திருமூலநாயனார் ஒரு ஆண்டுக்காலம் தியானத்தில் இருந்துவிட்டு வந்து ஒரு அருட்பாடல் எழுதுவார். அப்படி ஒவ்வொரு பாடலையும் திருவாய் மலர்ந்து அருளியதால் அது "திருமந்திரம்" ஆயிற்று . திருமூலநாயனார் பாடிய பாடலில் 1786-வது பாடல்:-
" உணர்வுடை யார்கட் குலகமுத் தோன்றும்
உணர்வுடை யார்கட் குருது யரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந் தவக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே "
இறைவன் எங்கும் நீக்கமர நிறைந்திருக்கிறான்; என்பதை
அருணகிரிநாதரும் "ஊனும் உயிருமாய் " இருக்கிறார் என்று பறைசாற்றுகிறார் ஒதிமலைப்பாடலில்.
ஆகையினால் நாம் இறைவனை நம் உள்ளும் வெளியிலும் எல்லாவற்றிலும், எல்லா உயிரிடத்திலும், எல்லாரிடத்தும் உறைவதை உணர்வோம்.
இனி அம்மன் கோயிலிலி உறையும் ஆத்தாளை பற்றி பார்ப்போம் ..பயணம் அய்யன் அருளுடன் தொடரும் ..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/
https://www.facebook.com/groups/othimalaikamukkam/493338774139249/?notif_t=like
Othimalai Devine Secrets and its Devine Journey (5)
சிவ சிவ
அன்று சீர்காழி பிள்ளையார், மயிலையில் இறந்துபோன பெண்ணின் எலும்புத்துகலை (அஸ்தியை) கபாலீச்சுரன் சந்நிதியில் வைத்து கயிலை நாதனை இறைஞ்சி பூம்பாவை என்ற பெண்ணை உயிருடன் மீட்டு கொடுத்தார் என்பது வரலாறு.
இப்போது சிரவண புறீச்சுரராக குழந்தையை கொடுத்த நிகழ்வுக்கு வருவோம் - அன்று அவிநாசியில் ஆற்றில் விளையாடிய குழந்தையை முதலை கொண்டு சென்றது. மூன்று ஆண்டுகள் கழித்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசியப்பரை உரிமையுடன் "முதலை வாய் குழந்தையை மீட்டுத்தர பணி " என்றதும் அய்யன் அருளால் அப்பாலகன் உயிருடன் மீண்டுவந்தான் இதுவும் இத்தள அருள் வரலாறாகும்.
இப்பொழுது சரவணப்பட்டி ஈசனாக இராமசாமியின் மகனை காலனிடமிருந்து மீட்டுகொடுத்த சம்பவம்.
இதை நாம் ஏன் பேசுகிறோம் என்றால் அந்த இறைவன் இன்றளவிலும் அன்பர்களுக்கு அருள்கின்றானா என்ற ஐயம் எழாவண்ணம் இருபதற்குதான். நம்முடன் இறைவன் இருக்கிறான் என்பதை முழுமையாக நம் அனைவருள்ளும் உறைகிறான் என்பதை உணர்தல் வேண்டும் அல்லவா !. திருமூலநாயனார் ஒரு ஆண்டுக்காலம் தியானத்தில் இருந்துவிட்டு வந்து ஒரு அருட்பாடல் எழுதுவார். அப்படி ஒவ்வொரு பாடலையும் திருவாய் மலர்ந்து அருளியதால் அது "திருமந்திரம்" ஆயிற்று . திருமூலநாயனார் பாடிய பாடலில் 1786-வது பாடல்:-
" உணர்வுடை யார்கட் குலகமுத் தோன்றும்
உணர்வுடை யார்கட் குருது யரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந் தவக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே "
இறைவன் எங்கும் நீக்கமர நிறைந்திருக்கிறான்; என்பதை
அருணகிரிநாதரும் "ஊனும் உயிருமாய் " இருக்கிறார் என்று பறைசாற்றுகிறார் ஒதிமலைப்பாடலில்.
ஆகையினால் நாம் இறைவனை நம் உள்ளும் வெளியிலும் எல்லாவற்றிலும், எல்லா உயிரிடத்திலும், எல்லாரிடத்தும் உறைவதை உணர்வோம்.
இனி அம்மன் கோயிலிலி உறையும் ஆத்தாளை பற்றி பார்ப்போம் ..பயணம் அய்யன் அருளுடன் தொடரும் ..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/
https://www.facebook.com/groups/othimalaikamukkam/493338774139249/?notif_t=like
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு