வியாழன், 22 ஜனவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (எ ) Othimalai Devine Secrets and its Devine Journey (7)






ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (எ )
Othimalai Devine Secrets and its Devine Journey (7)










பொதுவாக 'பூ' வரம் கேட்கும்போது, மிகுந்த பக்தியுடனும் பணிவுடனும் கேட்கவேண்டும்.  அந்த பரம்பொருளிடம் நேரிடையான கோரிக்கையல்லவா ? நாமே சில உதிரிபூக்களை கொண்டுசென்று கொடுக்கவேண்டும்.  நம் கோரிக்கையை நாமே வைக்கவேண்டும்.  உத்தரவுவரும் வரை மண்டியிட்டுக்கொண்டு அய்யனிடம் அன்பொழுக கேட்கவேண்டும்.  அப்படித்தான் ஓதிமலையில் கேட்பது தொன்றுதொட்டு வழக்கம்.

அப்படி அம்மன்கோயில் ஆத்தாளையும் கேட்டார் , எங்கள் நண்பர்.

பரம்பொருள் எவ்வடிவமாக இருந்தபோதிலும், நமக்கு நம் கோரிக்கைக்கு சரியான பதில் அளிக்கப்படுகிறது உண்மை அதை நம்மால்தான் புரிந்துகொள்வது இயலாமல் போகிறது. இடப்புறம், வலப்புறம், நிலைத்து நிற்பது என்ற எல்லைக்குள் நம்பிக்கையை வைத்துகொண்டிருக்கிறோம்.

இப்பொழுது ஆத்தாள் அளித்தவரம் புதுமையாக இருந்தது.  பூ  இடப்பக்கம் விழுந்து..இடுப்புவரை வந்தவுடன் பலப்பக்கம் திரும்பி விழுந்தது எங்களுக்கு ஒன்றும் புரியாத நிலைக்கு தள்ளியது.

நண்பரின் மகன் மதிப்பெண் குறைவால் தேர்வுபெறவில்லை என தெரிந்தது. மிகவும் வருந்தினர் நண்பர்.  அடுத்தவாரம் மிகுந்த முயற்சியுடன் பயிற்சிசெய்து தேர்வெழுதி தேறினார், நல்ல வேலையும் கிடைத்தது.  இப்போது புரிந்தது ஆத்தாளின் பதில்.

பரம்பொருள் நமக்கு எல்லாவற்றையும் சரியாகத்தான் தெரிவிக்கிறது இருந்தும் நம்மாள்  புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை என்பதுதானே சரி.

ஆத்தாவின் சிலைவடிவம் ஒதிமலையிலிருந்து வந்தது என்று ஒரு செவிவழி செய்தியும் உள்ளது.   இந்த ஆத்தாவின் சன்னிதியிலிருந்துதான்  முதன் முதலில் பாதயாத்திரை தொடங்கியது.

'பூ' வரம் என்றாலே ஓதிமலை பற்றி ஒரு துகள்

ஆரூரில் பிறக்க முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி,  அண்ணாமலையை நினைக்க முக்தி இவை நாம் கேள்விப்பட்டது.  முக்திதலங்கலாக இன்னும் பல தலங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள்.   ஓதிமலையில் நம்கால் பட்டால் முக்தி ஏற்படும்.  அருளாளர் அருணகிரிநாதர் கூறிய கூற்றுப்படி இருகாதுகளிலும் ஓங்காரத்தை (பிரணவத்தை) திருவாய்மலர்ந்த (உபதேசித்த) ஓதியப்பன் நமக்கு அதாவது இந்த ஜீவ ஆன்மாவாகிய நமக்கும் திருவாய்மலர்ந்து வழிகாட்டி, நம்மையும் அந்த பரமாத்மாவுடன் இணையவைப்பார்.  ஒவ்வொரு ஆன்மாவும் சித்தநிலை அடைந்தவுடன் ஒதிமலையில் ஓதியப்பன் அந்த  'சித்தர்' என்ற  நிலை அருள் பாலிக்கிறார் என்று ஏடுகள் கூறுகிறது.  இம்மலை பொதிகைக்கு ஒப்பானது என்று தெரிவிக்கும் பிருகு, நந்தி, அகதியமுனி ஜீவ நாடியில் கூறியிருக்கிறது.

இது ஓர் துகள். விளக்கமாக மற்ற தெரியாத புதைந்த விவரங்களை பின்வரும் பகுதிகளில் அன்பர்களின் விருப்பத்தை தொடர்ந்து பார்போம் .

*  முதலில் இருக்கும் படம் அய்யன் சடையப்பர் ஜீவசமாதி , இரண்டாவது படம் ஆத்தாள் முன்றாவது இருப்பது இராசாமி பூசாரி நான்காவது அய்யன் காளிதாசு,  ஆத்தாள் பூசாரி  *


இப்பொழுது ஓர் அழகான அய்யனின் நேரிடை நிகழ்ச்சியை பார்போம் ...அடுத்த பதிவில் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக