வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ங) Othimalai Devine Secrets and its Devine Journey (3)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ங)
Othimalai Devine Secrets and its Devine Journey (3)

அந்த அம்மணி சரவணப்பட்டியில் துறவியாய் திருவடமனிந்து அருள்வந்த ஈசனிடம் என்ன சொன்னார் என்பதும் இந்த நிகழ்வு (சம்பவம்) இன்றளவிலும் அந்தபகுதியில் உள்ளவர்கள் உணர்ந்த, தெரிந்த உண்மை.  தனக்கு குழந்தை பெற இயலாத காரணத்தால் தன் கணவரும், அவரின் குடும்பத்தினரும் தன் கணவருக்கு வேறு திருமணம் நிச்சயம் செய்ய திட்டமிட்டிருக்கும்  செய்தியே அந்த அம்மையாரின் துயரத்துக்கு காரணம்.  துறவியாக வந்தயெம்பெருமான் 'கவலையை விடு' என்று கூறி தனது மாடியிலிருந்து ஒரு பொடியை கொடுத்து உன் கவலை நீங்கும் என்று கூறி மறைந்தார் அந்த மறையவர்.

விதியின் வசதாலோ , சரவணப்பட்டி வாழ் மக்களின் நலனுக்காகவோ என்னவோ, அந்த அம்மணி துறவியின் கருமைபடிந்த அருவருப்பான உருவமும், அழுக்கான ஆடையிலிருந்த அளித்த அளித்த பொடியை உண்ண மனம் வரவில்லை.  அந்த பொடியை அருமருந்தை எதிரில் இருந்த மாட்டுத்தொழுவத்தில் ஓர் வாழையிலையில் போட்டுவிட்டார்.  அங்கிருந்த பசு பொடியுடன் இருந்த இலையை தின்றுவிட்டது.

என்னே! விதியின் விளையாட்டு; அந்தப்பசு ஒரு ஆண் மகவை ஈன்றது பிறப்பின் விந்தையன்றோ.  பிறந்த அக்குழந்தை சடைமுடியுடன் இருந்ததால் கிராமத்துமக்கள் "சடையப்பன் " என்று பெயரிட்டு அழைத்துவந்தனர்.

பற்பல சித்துவிளையாட்டுடன் வளர்ந்து "சடையப்பயோகீசர் "   என்ற திருநாமத்துடன் பல ஆண்டுகள் வாழ்ந்து தம்மிடம் வந்தவர்களுக்கு பற்பல நன்மைகளைச் செய்து அருகில் இருந்த "அம்மன்கோயில் " என்ற பகுதியில் 'சீவ முக்தி(சமாதிநிலை)' அடைந்தார் .  இப்பொழுதும் பல சித்து விளையாடி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.   அன்னாரின் தலைமுறையில் (வம்சத்தில்) வந்தவர்கள் அனைவரும் "கோ வம்சத்தினர்" என்று இன்றும் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  "பண்டாரம் " என்ற பெயரில் பல கோயில்களில் பூசை செய்து கொண்டிருக்கிறார்கள்,  கோவையிலும் அதன் சுற்றுப்புறத்திலும்  துரவியாகவந்த ஈசுவரனை பற்றியும், அம்மன் கோயிலைப்பற்றியும்  அடுத்து வரும் பதிவில் பகர்வோம்..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/

செவ்வாய், 16 டிசம்பர், 2014

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (உ ) Othimalai Devine Secrets and its Devine Journey (2)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (உ )
Othimalai Devine Secrets and its Devine Journey (2)

http://othimalaikamukkam.blogspot.in/2014/12/blog-post_16.html?showComment=1419223362612#c4920870070335640349

ஓதிமலை என்ற கடலுக்குள் முழுகுவதற்குமுன் சில தொடர்புள்ள நிகழ்வுகளை இன்றைக்கு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குமுன் உண்மையில் நடைபெற்ற நிகழ்வு (சம்பவம்) இது ;

ஓர் அழகான, அமைதியான பசுமைபூத்து குலுங்கும் கிராமம் , அங்கு கைலசபதியாகி ஈசன் சிரவனபுரீச்சுரர் என்ற திருநாமத்துடன் கோயில்கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.   ஆம அந்த கிராமம்தான் இன்று கொங்குநாட்டில் கோயம்புத்தூர் அருகில் சரவணப்பட்டி என்று அழைக்கபடுகிறது .  இப்பொழுது நிகழ்வுக்கு வருவோம் .

அக்கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் ஒரு அம்மணி அமர்ந்துகொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கண்களில் கண்ணீர் ததும்ப ஐயன் ஈசனை வேண்டிக்கொண்டிருந்தார்.

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட
பாற்கடல் ஈந்த பிரான் அல்லவா ஐயன் ?

அடியார்களுக்காக பற்பல வேடம் தாங்கி அருளும் சிறந்த மிகப்பெரிய வேடதாரியல்லவா அவன்.
இப்போது ஜடா முடியுடனும் , உருத்திராட்ச மாலைகள் திருமேனியில் அணிந்தும் அழுக்குநிறைந்த ஆடையை அணிந்தும் சற்றே கருமை நிற உருவத்துடனும் அந்த பெண்மணியிடம் வந்தார்.  வந்தவர் "அம்மணி" என்று அழைத்தார் .  ஆம் இப்பொழுதும் கொங்குநாட்டில் 'தாய்மார்களை' அம்மணி என்றும் 'குழந்தைகளை'  தங்கம் என்றும் அழைப்பது வழக்கமாய் உள்ளது தங்கள் அறிந்ததே.

அம்மணி ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் என்றவுடன் யாரிடமும் தன் துயரத்தை வெளிப்படுத்த முடியாமல் தனக்குள் வைத்திருந்தது உடனே மடைதிறந்த வெள்ளம்போல் அப்படியே மனதில் இருந்ததை கொட்டி அழுதுவிட்டார் அந்த அம்மணி .

அப்படி என்ன அந்த அம்மணி சொன்னார் அடுத்த பதிவில் உணர்வோம் தங்கள் விரும்பி கேட்டால் அய்யனே !

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்): ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (க)...

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்): ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (க)
...
: ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (க) (அருள்திரு மும்பை நாகராசு அய்யா ,  அருள்திரு சிவகுமார் அய்யாவுடன்  மலப்புழு ஓதியடிமை  ம...

திங்கள், 15 டிசம்பர், 2014

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (க)

(அருள்திரு மும்பை நாகராசு அய்யா ,  அருள்திரு சிவகுமார் அய்யாவுடன்  மலப்புழு ஓதியடிமை  மற்றும் நாம் அனைவரும் இணைந்து செல்லும் ஆன்மீக ஒதிமலை பயணம் )

ஒலிகளையே மையம்கொண்டு தோன்றி இயங்குகின்ற
உடலில் உட்பொருளை அல்லது உறுப்புகளை
சித்தத்துடன் இனணத்து தொட்டு ஓதி
வெற்றிகண்டவர்களே சித்த பெருமக்கள்ː

அந்த சித்த பெருமக்கள் நம்மிடம் மிகவும் அருள்கொண்டு (கருணை ) நமக்கு பாடல்கள் மூலமாகவும், குரு சீட
உரையாடல்கள் மூலமாகவும் , பல கருத்துக்களை
தெரிவித்து தெரியபடுத்தியுள்ளர்கள்.

அவற்றுள் சில, 'ஞானவெட்டியான்', 'அகத்தியர்  ஞானம்', முதலானவை .. முருகப்பெருமான்  அருள்ததும்ப முதல் மூத்த முனியான அகத்தியப்பெருமானுக்கு  அருளிய 'சுப்பிரமணிய ஞானம்', 'பெரிய ஞானக்கோவை' எனப்படும் சித்தர்கள் பாடல்கள், சிவானந்த பரமாம்சர் அருளிய 'சித்தவேதம் ' ஒளவையார் அருளிய   'ஒளவைக்குறள்'  போன்ற அறிவு நூல்களை கற்றுக்கொண்டும் கூடியமட்டும்  "கற்றபின் நிற்க அதற்கு தக " என்று திருவள்ளுவனார் மொழிந்ததற்கு ஏற்ப ஓரளவிற்கு முயன்று, வாழையடி வாழையென தோன்றிய திருக்கூட்டம் என்பதுபோல் ஆர்வமிகுதியாலும், பரம்பொருளின் வழிகாட்டுதலாலும் சித்த பெருமக்களின்  பாதையை பின்பற்றிவருகிறோம்.

சித்தர்கள் தங்கியருளிய மலைகளிலும் , குகைகளிலும் விரும்பி சென்று முறையான பயிற்சி செய்வோம்.
இமயமலைச் சாரலில் உள்ள இடங்கள் மற்றும்
தென்னகத்திற்கே உரிய சிறப்புகள் பல மிகுந்த கயிலைமலைக்கு இணையான பொதிகைமலை , தென்கயிலாயம் எனப்போற்றப்படும்  வெள்ளியங்கிரி  அடிமுடிகான இயலாத திருவண்ணாமலை  வாயுமைந்தன் அனுமன் சுமந்துசென்ற 'பர்வதமலை
சித்தர்கள் உலாவும் தீர்த்தமலை , சித்தமக்கள் மிகவும் சினங்கொண்டு பயிற்சி செய்த கொல்லிமலை போன்ற ஆன்மிக சிறப்பு மிகுந்த இடங்களில் தங்கிபயிற்சி செய்வது வழக்கம்.

இத்தெய்வீக சிறப்பருள் செறிந்த சித்த மகான்களின் திருத்தாள் பற்றி அவர்தம் அடிச்சுவட்டில் செல்லும் எங்களுக்கு அருளூட்டிய பரம்பொருள்  காட்டிய அருள்மலை  ஒதியங்கிரி எனப்படும் ஒதிமலை.  இவ்வோதிமலை மிக மிக அற்புதமானதும், அழகே உருவானதும், மலைகளில் தனித்துவம் வாய்ந்ததும், பற்பல கமுக்கங்களை (இரகசியங்களை) தன்னகத்தே ஒருங்கபெற்றதுமான சிறப்புவாய்ந்த மலை ஒதிமலையாகும்

ஒதிமலையின் சிறப்பையும் ,  ஒருசில கமுக்கங்களையும் (இரகசியங்களை) சென்றுவந்த அனுபூதிகளையும்  (அனுபவங்களையும்) மெய்யன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் விருப்பமாயுள்ளோம் ..வரும் பகுதிகளில்

இவ்விடுகை பற்றிய மெயன்பர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்

                                ...ஒதிமலையின்  ஆன்மீக அருல்பயணம் தொடரும்..
https://plus.google.com/photos/118179755605870550832/albums/5367176929620166961?banner=pwa

https://plus.google.com/photos/118179755605870550832/albums/5367176929620166961?banner=pwa