வியாழன், 19 மார்ச், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௧ ) Othimalai Devine Secrets and its Devine Journey (11)





ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௧ )
Othimalai Devine Secrets and its Devine Journey (11)

பொன்  ஊத்துமலை செல்லுமுன் ஒரு சிற்றூர் தென்பட்டது மிகவும் சுவையான செய்தியாகும்.   வடமதுரை என்றதும் கைலாச பதியின் பல திருவிளையாடல்கள் [மதுரையம்பதியில் நிகழ்ந்தது)  மனதில் இழைந்தோடியது, இங்கும் ஓர் பெரிய கோபுரம் இருக்கும் என்று தேடி கிடைக்கவில்லை. ஆனால் அந்த நீலகண்டனின் பழமையான ஆலயம் இருந்தது.  நாங்கள் சென்ற நாளோ அருள்நிறை முருகனுக்கு உகந்த கிருத்திகை.  செவ்வேள் கோயில் முகப்பிலேயே மயில்மீது முழுமையான அலங்காரங்களுடன் காட்சி அளித்தார்.  அங்கு  நீலகண்டனின் திருநாமம் விருத்தீசுரர்.  அய்யன் சுந்தரமூர்த்தியடிகள் அவிநாசியப்பரை  தரிசித்து வடமதுரை வழியாக வரும்போது மிகிவும் களைப்புற்று பசியாலும் தாகத்தாலும் வாடினார்.  மேலும் நடக்க முடியாமல் அருகிருந்த ஒரு முருங்கை மரத்தடியில்  களைப்பாக அமர்ந்தார்.

இப்போது அந்த உமாபதி 'வேடனாகவும்' அம்மை 'வேடுவச்சி' நிலையிலும் வந்து விசாரித்து அந்த முருங்கை மரத்தின் இல்லை, காய்களை பறித்து நல்ல விருந்து படைத்தார்கலாம். அம்மை புடவை தலைப்பால் வீசி அருளினார்களாம்.  காசியில் இறப்பவர்களை அப்பன் மடியில் வைத்து தாரக மந்திரம் கூற தாய் முந்தானையால் வீசுவார் என்பது காசி காண்டம் கூறுகிறது.

விருந்து படைத்த   'வேடனும்'  'வேடுவச்சி'யும் உமா மகேசுரராக விடைமேல் காட்சி கொடுத்ததனால் இங்கு விருத்தீசுரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் என்பது திருவிளையாடல் திருநிலையாகும்.

இப்பொழுது பொன் ஊத்துமலை கோவையில் எங்கிருந்து  பார்த்தாலும் தெரியும் பெரியமலை, அம்மலையுச்சியில் ஒரு சிகரம் சிவலிங்கபாணம் போன்று காட்சிதரும்.  கீழ்பொன்  ஊத்துமலைஅடிவாரத்தின் மேல் ஏறினாள் மேல் பொன்  ஊத்துமலை புலப்படும்.   கீழ்பொன்ஊத்து அடர்ந்த கானகத்தில், பெரிய பெரிய கற் பாறைகளின் வழியாக அருமையான, தூய்மையான நீர் அருவியாக வரும்.  பெரிய நீர் வீழ்ச்சியாக இல்லை ஆனால் சிலர் நன்றாக நீராடலாம்.  மேல் மட்டத்தில் பெரிய பாறைகள் சமமாக இருக்கும், சிலர் படுத்துக்கொண்டே குளிப்பார்கள்.  ஒருசிலர் எண்ணை தேய்த்து அருகிருக்கும் சீயக்காய் மர இலையை பறித்து தேய்த்து குளிப்பார்கள்.  இந்த நீர் பாறைகளுக்கு இடையில் ஓர் அறை போன்ற அமைப்பு இருக்கும் அங்குள்ள அம்மையின் உருவச்சிலையை இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு வழிபடுதல் வேண்டும்,  அந்த அருவியின் ஒலிச் சிதரல்களில், அருவியின் அடியில் பாறைகளின் நடுவே இரண்டு குளக்கரைகளில் இரு முனிவர்கள் தவம் செய்துகொண்டிருந்தார்கள்.  உண்மையான துறவிகள்.  மக்கள் அதிகமாக வரத் துவங்கியதும் ஒருவர் தீர்தமலைக்கு சென்றுவிட்டார் மற்றொருவர் மேல் பொன் ஊத்துமலைக்கு சென்றுவிட்டார் .  மிகவும் சிறந்த தவயோகிகள் அவர்கள் .  மேல் பொன் ஊத்துமலை சென்றவர் பேசுவதில்லை, சற்றே சிரமப்பட்டு நீர் வரும் பாதையில்மேலே நடந்தால் அழகான ஓர் பறையின் பக்கத்தில்  இருக்கிறார்.  நாம் பச்சை பயிறு கொடுத்தால் எடுத்துக் கொள்வார்.  அவர் அருகில் அந்த சூழலில் அமர்ந்தால் திரும்பிவர மனமிருக்காது.

இந்த நக்கீர நாயனாரை பூதத்திடமிருந்து காத்த குமரன், நாமமலை சித்தரை காத்த உண்மை நிகழ்வை பார்போம்

...இவ்வருட் பயணம் தொடர அன்பர்களின் பதிவு மிகவும் தேவை ,,,

www.youtube.com/watch?v=QcldxnElDf8
http://theisticserendipity.blogspot.in/2011/05/kurudi-hills-and-ponnuthu.html

வியாழன், 12 மார்ச், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(ய ) Othimalai Devine Secrets and its Devine Journey (10)





ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(ய )
Othimalai Devine Secrets and its Devine Journey (10)
வடமதுரை பொன்ஊற்று (பொன்ஊத்து மலை )
தேவர்கள் அமிர்தம் அருந்தி சாகாமல் நிலைத்திருக்க நினைத்தாலும் யுகமுடிவில் அழிகிறார்கள். ஆனாலும் கயிலாசபதி ஆலகால நஞ்சை விழுங்கினாலும் என்றும் நிலைத்திருந்து இப்புவியை மட்டுமல்லாமல் முழு அண்டங்களையும் காக்கின்றாயே அய்யனே இது உலகின் விந்தையிலும் விந்தையல்லவா என்று ஒரு அடியார் பாடுகிறார் . மற்றுமொரு அடியார் தன் ஒருபாகத்தை உமையாளுக்கு கொடுத்துவிட்டாய், மற்றொரு பாகத்தை சங்கரநாராயணன் என்று நாராயணனுக்கு கொடுத்துவிட்ட உமக்கு ஏது அய்யனே உடல் (சரீரம்) என்று அன்பொழுக வினவி தன் பக்தியியை வெளிப்படுத்கிறார். அன்னை உமாதேவியின் முகத்தை முழுநிலவாகவே பார்த்த அபிராமிபட்டருக்கு அம்மவாசை கூட முழுநிலவாகவே (பவுர்ணமியாக) பார்த்தாரல்லவா. இப்படி பல அன்பர்கள் பல நிலைகளில் ஒருவருக்கொருவர் நிகரில்லாமலும் பக்தி செலுத்தினாலும் நம் மனதில் இருப்பது வேடன் கண்ணப்பர் பக்தினிலையும், மார்க்கண்டேயரின் பக்தியும் மட்டுமே சிறந்துள்ளது அன்றோǃ இவர்களின் பக்தியை பாடாத அடியார்களே இல்லை எனலாம். தேவர்கள் கடத்தில்(குடத்தில்) இருந்து அமிர்தத்தை அருந்தி எஞ்சிய அமிர்தத்துடன் உள்ள கடத்தை(குடத்தை ) தேவர்கள் பூமியில் உள்ள ஒரு இடத்தில் புதைத்துவைதார்கலாம் பிறகு எடுத்துகொள்ளலாம் என்று நினைத்து. மறுபடி வந்து பயன்படுத்த எடுக்க நினைத்து குடத்தை புதைத்துவைத்த பூமியிலிருந்து மேலிழுக்க முடியாமல் எடுத்தபடியே அப்படியே நின்றுவிட்டது. இறைவன் அசரீரி வாக்கில் இனி இது பூமியில் உள்ளவர்களுக்கு பயன்படட்டும் என்று கூறினார். இதுவே இன்றும் நாம் காணும் "அமிர்தகடேச்சுரர்" . ஆகவே அந்த கடத்தை (குடத்தை) திருமுழுக்காட்டி (அபிசேகித்து ) வரும் நீரை அருந்தினால் அழியாநிலை அடையலாம் என்பது ஒரு நம்பிக்கை. இந்த மூர்தியின்மேல் காதலால் நாலும் பூசைசெய்து அந்த மூர்த்தியை தழுவி என்றும் பதினாறாக (16) சாகா நிலையடைந்தார் மார்க்கண்டேயர். மார்க்கண்டேயரை காத்து காலனை காலால் கடிந்தபிறகு காலன் கதை என்னவாயிற்று. உமையவளின் பாகத்தின் காலன்றோ அது எப்படி காலன் இறப்பான், அல்லது தண்டிக்கப்பட்டு தன் சக்தியை இழந்தான். அவள் தாயல்லவா இறைவனால் எரிக்கப்பட்ட காமனை தன் கடைக்கண் பார்வையால் இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் புலப்படும்படியாக காமனை உயிரெழ செய்தால் அன்றோ. பார்வதியின் மனக்கோளநாளில் தன் சக்தியை இழந்த காலன் பலதளங்களுக்கு சென்று ஈசனை வழிபடத் தொடங்கினார், எந்தெந்த தளங்களில் நாம் எமளிங்கனை காண்கின்றோமோ அங்கெல்லாம் எமன் வழபாடு செய்த திருதலங்கலாகும். இவ்வாறு பல இடங்களில் சென்று வழிபடும்போது ஓர் இடத்தில நதியோன்றும் அதன் கரையில் ஒரு முனிவரையும் பார்த்தான், அந்த இடம் அவனை மிகவும் ஈர்த்தது. அருகில் சென்றதும்தான் தெரிந்தது அந்த முனிவர் மூத்த தவயோகியான கவ்சிகர் (விசுவாமித்திரர்) என்று. அகமிகமகிழ்ந்து பேராவலுடன் தன் குறையை கூற அவரும் அருள்கூர்ந்து அந்த நதிக்கரையிலே இறைவனை அமைத்து பூசை செய்யும்படி கூறி அருளினார். அந்த இயமனும் உடனே நதிக்கரையிளிருந்து சிறிது நுரையுடன்கூடிய மணலை எடுத்து லிங்கமாக பிடித்துவைத்து வழிபட துவங்கினார், கை தண்டத்தால் ஓர் குழி ஏற்படுத்தி நீர் வருவித்து பக்தியுடன் பூசை செய்யலானார். கவுசிகமுனி தவம் செய்ததால் அந்த இடத்திற்கு கவுசிகபுரம் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டது. அதுதான் இப்பொழுது கோவையில் உள்ள 'கோவில்பாளையம் ' என்ற அழகுமிகு கிராமமாகும். கோவையில் இயமன் பூசையில் மகிழ்ந்த பசுபதி இயமனுக்கு சக்தியை கொடுத்தருளினார் என்பது வரலாறு. இத்தளத்தில் உள்ள இறைவன் கூட நுரையுடன்கூடிய மண்ணால் ஆனது என்பது இங்கு நோக்கத்தக்கது, இறைவன் காலகலேச்சுரர், நந்தியெம்பெருமான் மரகதத்தால் ஆனது, இங்குள்ள தட்சினாமூர்த்தி பெரிய அளவில் அமைந்து தலைமுடியில் இலிங்க வடிவம் அமைந்துள்ள காரணம் தெரியவில்லை. ஐயனின் கோயிலுக்கும் அம்மையின் கோயிலுக்கும் நடுவில் மிகவும் அழகுபொருந்திய வேலனின் கோயில் அமைந்துள்ளது . முருகனின் சன்னதி எதிரில் இயமன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிகின்றார். தன் தண்டத்தால் தோண்டிய கிணறு 'எமதீர்த்தம்' என்ற பெயரில் அமைந்துள்ளது. காலனுக்கு அருள்பாலித்த அய்யன் நமக்கும் அருள் பாலிப்பார் என்று கூறி ஓதிமலை பயணத்தை மேலும் தங்கள் எதிர்பார்ப்புடன் துவக்குவோம் பொன்ஊத்து மலைக்கும் நாம மலைக்கும் ...

செவ்வாய், 3 மார்ச், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)(௯) Othimalai Devine Secrets and its Devine Journey (9)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)(௯)
Othimalai Devine Secrets and its Devine Journey (9)
இறைவனின் கட்டளை ஆயிற்றே கொம்பை பிடித்ததுதான் தெரியும் அந்த இளைஞனுக்கு ..என்றால் அது மிகையில்லை ...உணர்வுவந்து பார்த்தபோது ஒரு கவுண்டரின் தோட்டத்தில் கால்கலை நீட்டிய நிலையில் உட்கார்ந்திருந்தான், அருகில் இலையில் 4 இட்லியும், சட்னி சாம்பார் சேர்த்து பரிமாரப்பட்டிருந்தது. கால் வலி ஏதுமில்லை "நான் எப்படி இங்கு வந்தேன்" என்ற கேள்வி எழுந்து விடையேதும் புரியாமல் குழம்பியபடி அதே நிணைவுடன் ஒவ்வொருவராக விசாரிக்க துவங்கினான், எல்லோரும் நீ எங்களுக்கு முன் மிக விரைவாக சென்றாய் என்று கூறியதும் மேலும் குழப்பமாகி விழி பிதுங்கிய நிலையில் வியந்துநிற்க அந்த பெரியவர் "காரிப்பட்டி அய்யா" விடம் தாங்கள் வந்து கோல் கொடுத்தீர்களே என்றபோதுதான் அனைவருக்கும் புரிந்தது "காரிப்பட்டி அய்யா" நிலையில் வந்தது அந்த பெரியவர் இல்லை; அந்த பெரியவராக அருளியது முருகவேள் ..அன்று ஔவையிடம் வந்தது போல் அருளினார் என்பது. "காரிப்பட்டி அய்யா" அன்றிலிருந்து பூரித்துபோகிறார் அவர் உருவில் வேலன் வந்தாரே என்று நினைந்து நினைந்து .
அந்த இளைஞன் யார் வேறு எவரும் இல்லை, அம்மன்கோயில் ஆத்தாவின் அருளால் பிறந்து கோவை சிரவனபுரீச்சுறரால் உயிர்வூட்டப்பெற்ற நமது 'காளிதாசு பூசாரி ' தான் என்றால் வியப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறதல்லவா!

இறைவன் இன்றும் அன்றும் என்றும் எல்லா ஜீவ ஆன்மாக்களுக்கும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இரண்டுக்கும் அப்பாற்பட்ட நிலையிலிருந்தும் அருளூட்டி துணைபுரிகிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்!.
ஓதிமலைக்கும் இத்தலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இதுபற்றி பகிர்ந்துகொள்வோம்
இனி இவ்வருள்பயணத்தில் அடுத்த கட்டம் சரணவப்பட்டி, கோவில்பாளையம் என்ற மிக அழகான கிராமம் அங்கு அருளாட்சிபுரிவது "காலகலேசுவரர்" என்ற திருநாமத்துடன் அந்த கயிலையம்பதி தொடரும் பதிவில் விரிவாக பார்போம் மற்றுமோர் அருள்பயணமாக ..
அடுத்து வடமதுரா, பொன்ஊத்துமலை என பயணம் தொடரும் தங்கள் விருப்பத்துடன் என்றால் வெறும் புகழ்ச்சியில்லை அய்யனே!