புதன், 13 மே, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௪) Othimalai Devine Secrets and its Devine Journey (14)


ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௪)
Othimalai Devine Secrets and its Devine Journey (14)

தொலைபேசிக்கு அருகில் இருந்த சேலம் ஐயன் தொலைபேசியை எடுத்து பேசினார்.  ஐயனை சூழ்ந்துள்ள குண்டர்கள் கேட்க  "அய்யா" என்றார்.  மறு பக்கத்திலிருந்து ஒரு குரல் "ஐயனே எப்படி இருக்கிறீங்க", என்றது.  அய்யனோ யாரப்பா நீ என்றார்.  நான் தான் அய்யா வேலாயுதன், கடந்த வாரம் தங்களிடம் வந்து ஒரு குறையை தெரிவித்தேன்.  இப்பொழுது அது சரியாகிவிட்டது அய்யனே, நன்றி சொல்லவே அழைத்தேன் எப்படி இருக்குறீங்க அய்யனே என்றார் மீண்டும்.

அய்யன் சொன்னார் என்னை சுற்றி 5 அடியாட்கள் கையில் தடியுடன் சூழ்ந்து கொண்டு நிற்கிறார்கள், இன்னும் 3 மணியில் என் உயிர் போகப்போகிறது என்றார்.  மருமுனையிலுள்ள வேலாயுதம் என்ன அய்யா என்ன சொல்கிறீர்கள் விவரமாக சொல்லுங்க அய்யா என்றார்.  ஐயனும் அந்த செல்வந்தர் கூறி மிரட்டியதை அப்படியே சொன்னார் .    மூன்று மணியில் என்னை 300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபக்கதில் கொண்டுபோய் வெட்டி புதைக்கப்போவதாக அந்த செல்வந்தன் கூறியிருக்கிறான் என்றார்.  எதிர் முனையிலிருந்து  குரல் "அஞ்சாதீங்க அய்யனே"  அவர் வந்தவுடன் இன்னும் ஒருமணியில் தங்களுக்கு சொன்னது அந்த செல்வந்தனுக்கு நடக்கும் என்று சொல்லுங்கள் என்றார்.

சேலம் ஐயன் தொலைபேசியை வைத்ததும் சூழ்ந்திருந்த தடியர்களில் ஒருவன் தமிழன், என்ன அய்யா யார் தொலைபேசியில் என்றான், ..ஏதோ வேலையுதனாம் என்று விவரத்தை சொன்னவுடன்  "இன்னும் ஒருமணியில் அந்த செல்வந்தனுக்கு இதே நிலைமை நடக்கும் என்று சொன்னாம்ப்பா" என்றார்.  உடனே அந்த குண்டன் மற்றவர்களிடம் ஏதோ மொழியில் பேசினார்.  எல்லோரும் தடிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடதுவங்கினார்கள்.   மடியில் உப்பரிகையில் இருந்த அந்த செல்வந்தர் அவர்கள் ஓட்டம்பிடிப்பதை பார்த்து கீழே இறங்கிவந்து அய்யனிடம் "ஏய் சாமி " என்ன மந்திரம் போட்டாய்,  அவர்கள் ஏன் இப்படி பயந்து ஓடுகிறார்கள்?. என்று மிரட்டி கேட்க ஐயனும் தொலைபேசியில் ஏதோ வேலாயுதம் என்பவன் பேசினார்.  இன்னும் ஒருமணியில்  300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபக்கதில் கொண்டுபோய் வெட்டி புதைக்கப்போவதாக  கூறியிருக்கிறான்  என்றதும் அந்த செல்வந்தன் விரைந்து சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் கடவுசீட்டு, விமான பயணசீட்டு, சிறிது பணம் எல்லாம் கொண்டுவந்து என்னை அழைத்து தன் மகிழுந்திலேயே விமான நிலையத்திற்கு அழைத்துவந்து அவர்தான் என்னை அனுப்பிவைத்தார் என்று சொல்லி அவருக்கே உரிய பாணியில் சிரிக்க துவங்கினார்!

சாமி சொன்னார் நானோ ஆண்டி எனக்கு ஏன் இந்த வெளிநாடு ஆசை என்று சொல்லி மறுபடியும் சிரித்தார்.  இவ்வாறு பல செய்திகளை சொல்லி , எங்களுக்கு யோகா வழியின் மேல்நிலைகலையும் கற்றுகொடுத்த அந்த தெய்வம் 'சேலம் ஐயன்'  இப்பொழுது நம்மிடையே இல்லை என்பது வருத்தமே.

அந்த விரிந்து பரந்த ஆதியுடன் சமம் ஆகி  சமாதி ஆகிவிட்டார்.  அந்த ஐயன் தெய்வமாக ஆனவர் நம்மை வாழ்தியருளுவாராக அய்யனே!

இனி தீர்த்தமலை சித்தர்கள் அருளிய நிகழ்வுகளை அடுத்த பதிவில் பகர்வோம் தங்கள் விருப்பத்துடன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக