ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰ரு ) Othimalai Devine Secrets and its Devine Journey (15) தீர்த்தமலை சித்தர்கள்

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰ரு )
Othimalai Devine Secrets and its Devine Journey (15)
தீர்த்தமலை சித்தர்கள்
சித்தர்கள் நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்வார்கள், நமக்கு வேண்டியதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மிக அதிகமான அன்பர்கள் சித்தர்கள் தவம் செய்த மலைகள், உலவும் மலைகள், சீவ ஒடுக்கம் போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
சித்தர்களின் பார்வை, அவர்கள் காற்று நம்மேல் படாதா என்ற நம்பிக்கை, ஆம் உண்மைதான் பலர் இதனை உணர்ந்திருக்கிறார்கள், இதனாலேதான் மலைகளிலும் கோவில்களைப்போல் மக்கள் கூட்டம் நிறைகிறது.
ஐயன் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய செய்தியாவது .. தீர்த்தமலை சித்தர்களை பார்க்குமுன் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது இது . சில மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்கள், வலை வீசினார்கள் அப்பொழுது மீனுக்கு பதில் கடல் அடியில் சீவ ஒடுக்கத்தில் இருந்த ஒரு சித்தமுனிவர் அகப்பட்டுகொண்டார். மிகக்கடுமையாக முயன்று படகில் ஏற்றினார்கள். என்ன செய்வது என்று புரியாமல் கரைக்கு கொண்டுவந்த அவர்கள் அவரது உடல் மீது இருந்த கிளிஞ்சல், சிப்பி முதலான அனைத்தையும் நீக்கி தூய்மை படுத்தினார்கள். உடலை தூய்மை செய்த நான்கு மீனவர்களும் தம் மனைக்கு செல்லாமல், தவசியின் அருகிலேயே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்களாம், வீட்டிற்கு செல்லாததால் மனையின் மக்களும் செய்வதறியாது திகைத்துபோயினர். கூடியிருந்த வூர் மக்களில் ஒருவர் பக்கத்துக்கு ஊரில் ஒரு துறவி இருப்பதாகவும் அவரிடம் வழி பிறக்கலாம் என்று கூற அனைவரும் அந்த துறவியிடம் கூறி முறையிட்டனர்.. அத்துறவி சற்று யோசித்து சொன்னார் யாரவது தவறான வழிகளில் சம்பாதித்து சொத்து சேர்த்தவர்களின் வீட்டிலிருந்து சிறிது சோறு (உணவு ) கொண்டுவந்து அந்த நான்கு மீனவர்களின் வாயில் போடவும் அப்படி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். அவர்களும் அப்படியே செய்ய அந்த நால்வரும் பழைய நிலை திரும்பி வீடு சென்றார்களாம் .என்று வாரியார் கூறினார். இதிலிருந்து சித்த மகான்களின் வலிமையும், தம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்வதும் தெறிகிறது. நாம் அதை பயன்படுத்தி சிறப்படையவேண்டும். வாரியார் கூறிய மற்றொன்று மலைக் காடுகளில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களும் தம் தவம் கலைந்து அருகிலிருந்த கிராமத்தின் அருகிலிருந்த ஓட்டு வீட்டின் அருகில்வந்து நின்று கைநீட்டி உணவு கேட்டார், வீட்டிலிருந்த பெண்மணியும் அவர் கணவரும் வந்து உணவு கொடுத்தார்கள், சிறிது கீரையும் பரிமாறினார்கள். முனிவர் கீரை உணவு உண்டு முடிந்ததும் "கீரை " என்று கேட்டார், பெண்மணியும் கீரை கொண்டுவர உள்ளே சென்றார். இந்த நிலையில் முனிவர் சமாதி நிலையை அடைந்தார், நாட்களும், மாதங்களும் , ஆண்டுகளும் கடந்தது முனிவர் இருந்த இடத்தில் ஒரு புற்றே அமைந்துவிட்டதது, அந்த இடமும் ஒரு காடாக மாறிவிட்டது. முனிவரின் நிலை என்ன ஆனது அடுத்த பதிவில் காண்போம் .....அருள்பயணதில் உடன் பயணிக்கும் அணைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி...
Nerkunam Radhakrishnan VenkatesanRadhakrishnan RavKumar Esan மற்றும் வேறு 6 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
Muthu Suresh ஓம் சிவ சிவா
ஒதிமலை பயணக்கட்டுரை சிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக