ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ ) Othimalai Devine Secrets and its Devine Journey (19) கீற்று:2 "பாதை" ..... தொடர்ச்சி ..

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ )
Othimalai Devine Secrets and its Devine Journey (19)
கீற்று:2 "பாதை" ..... தொடர்ச்சி ..
அந்த மணமகன் திருமண ஆரவாரத்தில் துறவி பட்டினத்தார் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை அருகிலிருக்கும் இளம்பெண்ணிடம் தான் இருந்தது. துறவி விடவேயில்லை திரும்ப திரும்ப இப்பொழுதும் தப்பிக்கலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். திருமண நிகழ்வில் திருமாங்கல்யம் கட்டியவுடன் அகப்பட்டுக்கொண்டான் அகப்பட்டுக்கொண்டான் என்று சொல்லிக்கொண்டே வெளியேறிவிட்டார் என்றொரு செவி வழி செய்தி. இது இப்படியே இருக்கட்டும், நாம் மீண்டும் வகுத்துக்கொண்ட பாதையில் திருமணம் ஆகாத ஒரு ஆண் அல்லது பெண் நிலையில் சமுகத்தில் இயல்பான மதிப்பு அளிப்பதில்லை,மற்றவர்களைப்போன்று பார்பதுமில்லை. அதிலும் திருமணம் ஆகாத ஒரு பெண் என்றால் மிகிவும் கொடுமை, பெண்ணுக்கு கணவன் இல்லையென்றால் மிக மிக கொடுமை. அவர்கள் பல நிலைகளில் ஒதுக்கியே வைக்கபடுகிறார்கள் என்பது உண்மையே. திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்துவிட்டால் தம்பதியர்கள் பிழைத்தார்கள், இல்லையென்றால் மனைவி மீது தவறா, கணவன் மீது தவறா என்று குறித்து பேசுவார்கள். பெண் சற்று வசதி வாய்ப்புகள் இருந்தால் தப்பித்துகொள்வார். இல்லையென்றால் செய்தித்தாள்களில் வருமாறு ஆகிவிடும். பிறகு முதுமை இதைப்பற்றி கூறத்தேவையே இல்லை. மிகவும் அதிகமாத முதியோர் இல்லங்கள் உலகெங்கும் தனியார்களாலும், அரசுகளாலும் பல்கி பெருகியுள்ளமை அவர்களின் அவல நிலை பற்றி உணரலாம்.
...இவைகலிலிருந்து விடுபடும் பாதையை தேடி பயணிக்க ..பயணம் தொடரும் ...
Vijayalakshmi Ravichandranமற்றும் Vetri Vel ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக