ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௬ ) Othimalai Devine Secrets and its Devine Journey (16)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௬ )
Othimalai Devine Secrets and its Devine Journey (16)
"கீரை " என்று கேட்ட அந்த முனிவர் சமாதி உள்ள அந்த இடத்தில் புற்று எழுந்து காடாக மாறிய நிலையை பார்த்தோம். இப்போது அந்த இடத்தை ஆட்சி செய்த மன்னன் வேட்டையாடிய நிலையில் அப்பகுதிக்கு வந்த அரசன், தான் வந்த குதிரை அந்த புற்றின்முன் நின்றது, மேலே போக மறுத்ததை பார்த்த அரசன் அந்த புற்றை அகற்ற சொன்னார். என்ன வியப்பு ! சமாதியில் இருந்த அந்த முனிவர் தவம் கலைந்து "கீரை " என்றார்.
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அந்த முனிவர் கூறினார் .. நீயும் உன் மனைவியும் எனக்கு உணவு கொடுத்தீர்கள் நான் கீரை கேட்டுவிட்டு மீண்டும் சமாதியில் போய்விட்டேன், நீயும் உன் மனைவியும் இப்பொழுது அரசனும் அரசியுமாக இந்த பிறவியில் பிறந்துள்ளீர்கள் என்று கூறினார். ஓர் உண்மையான துறவிக்கு உணவளித்தவர்கள் அரசனும் அரசியும் ஆனார்கள் என்று வாரியார் கூறினார். இதைபோன்ற ஒரு உண்மை நிகழ்வுதான் நாம் இப்போது பார்க்கவிருப்பது.
நன்னிலம் என்ற ஊரில் பூந்தோட்டம் என்ற கிராமத்தில் சரசுவதி கோயில் உள்ளது நம் அணைவருக்கும் தெரிந்திருக்கும், தற்போது சிறப்பாக வளர்ந்து ஓர் ஊராக மாறியுள்ளது, கோயிலுக்கு செல்லுமுன் பாலம் உள்ள ஒரு வாய்கால் உள்ளதாள் போக்குவரத்தும் அதிகமான சாலையாக உள்ளது. அதன்வழியாக உள்ளே சென்றால் செடிகளும் மரங்களுமாக வயல்கள் நிறைந்த மிகவும் தனிமையான அந்த பகுதியில் ஒளிமயமான இடத்தில் உள்ள குடிசையின் முன் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி இருந்தார். மண் அடுப்பில் தனக்காக ஏதோ உணவு தயாரிக்க முனைந்து கொண்டிருந்தார். மூன்று சித்த பெருமக்கள் அப்பெண்மணியின் அருகில் வந்து நின்று எங்களுக்கும் உணவு கிடைக்குமா என்றார்கள். அந்த பெண்மணியும் இருப்பதை பகிர்ந்து அனைவருக்கும் உணவு அளித்தார். "கருவாட்டு குழம்பு" ஆக்கி போட்டேன் என்றார் எங்களிடம் . நாங்கள் பார்க்க சென்ற பொது வயல்களுக்கு நடுவில் உள்ள வரப்பு என்பார்களே அங்கு எவருமே இல்லாத இடத்தில் ஆசை, பாசம், வெட்கம், உறவு, உடை அனைத்தையும் துறந்து நிர்வாண நிலையில் அமர்ந்திருந்தார், நன்றாக பேசினார், நதி மூலம் ரிசி மூலம் கேட்க கூடாது என்றதால் நாங்கள் எதையும் அம்மணியிடம் கேட்கவில்லை. முதலில் தவறாக புரிந்துகொண்ட அவ்வூர்மக்கள் அவரை அடிப்பதும், தாக்குவதும், புடவை கொடுத்தும் பார்த்திருக்கிறார்கள், பிறகு காலம் செல்ல செல்ல அந்த பெண்மணி துறவி என்பதை உணர்ந்து தங்களின் குறைகளை கூறி ஆசி பெற்று செல்கிறார்கள். நாங்கள் எப்போது சென்றாலும் எங்களிடம் நன்றாகவே பேசுவார்கள். இந்த நிலைக்கு எப்படி வந்தீர்கள் என்று கேட்டபோது:- மூன்று சாமி வந்தாங்க சாப்பாடு கேட்டாங்க நாங்கள் தீர்தமலையிலிருந்து வந்திருக்கிறோம் என்றார்கள் அவர்களுக்கு "கருவாட்டு குழம்பு" ஆக்கி போட்டேன் என்றார். உண்மையில் ஆடையேதும் அணியாத அந்த அம்மைக்கு நீண்ட சடைமுடி மட்டுமே ஆடையாக இருந்தது அய்யனின் அன்பு நிலை தானே இன்றும் நம்மிடையே உள்ளார். இவரைப்பற்றிய விவிரங்கள் வலைத்தளத்தில் பகிர இயலாததால் விரும்புவோர் சென்று ஆசி பெறலாம். நம்மிடையில் வாழும் உண்மை துறவி. தீர்த்தமலை பல சிறப்புகள் மிகுந்த அருள்மலை. தங்களின் பெயர் என்ன என்று கேட்டதற்கு "சின்னகுஞ்சு" என்று கூறினார் .. பயணம் பயணிக்கும் ...
Radhakrishnan RavAathiguru GuruNagarajan Krishnamurthyமற்றும் வேறு 4 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
Nagarajan Krishnamurthy mihavum nandraha ulladhu siva..nandri ....annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக